states

img

உத்தரபிரதேசம்: டெல்லி-சஹாரன்பூர் ரயிலில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா ரயில் நிலையத்தில் இன்று சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ரயில் நின்றுகொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறினர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்தேசம் எதுவும் இல்லை.

ரயில் இன்ஜினிலும் தீ விபத்து ஏற்பட்டதால், ரயிலை இயக்க முடியாமல் போனது. இதனால் இஞ்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க, பயணிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ரயிலை தள்ளினர். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.  ரயிலில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.